என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை - போலீசார் விசாரணை
Byமாலை மலர்3 Jan 2020 10:22 AM GMT (Updated: 3 Jan 2020 10:22 AM GMT)
கோவை அருகே வீட்டு வேலைகளை செய்யும்படி தாய் கூறியதால் விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
கோவை எஸ்.எஸ்.குளம் அருகே உள்ள பொன்னேகவுண்டன் புதூரை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மகள் மைதிலி (வயது 19).
இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 1-ந் தேதி கல்லூரி விடுமுறை என்பதால் மைதிலி வீட்டில் இருந்தார்.
அப்போது அவரது தாய் வீட்டு வேலையில் தனக்கு உதவி செய்யும்படி கூறினார். இதனால் அவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த மைதிலி விஷத்தை எடுத்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார்.
இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக மைதிலியை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மைதிலி சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை எஸ்.எஸ்.குளம் அருகே உள்ள பொன்னேகவுண்டன் புதூரை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மகள் மைதிலி (வயது 19).
இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 1-ந் தேதி கல்லூரி விடுமுறை என்பதால் மைதிலி வீட்டில் இருந்தார்.
அப்போது அவரது தாய் வீட்டு வேலையில் தனக்கு உதவி செய்யும்படி கூறினார். இதனால் அவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த மைதிலி விஷத்தை எடுத்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார்.
இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக மைதிலியை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மைதிலி சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X