என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் அருகே கஞ்சாவுடன் சிக்கிய 6 சிறுவர்கள் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு
Byமாலை மலர்2 Jan 2020 10:17 AM GMT (Updated: 2 Jan 2020 10:17 AM GMT)
திருப்பூர் அருகே 1 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய 6 சிறுவர்களை போலீசார் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் அருகே உள்ள வீரபாண்டி எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஜெ.ஜெ.நகர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே 6 சிறுவர்கள் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தனர்.
இதை பார்த்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்களிடம் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் இதுகுறித்து அவர்களிடம் விசாரித்தனர்.ஆனால் அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை. இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் 6 பேரும் ரூ.6 ஆயிரத்தை எடுத்து கொண்டு திண்டுக்கல்லுக்கு சென்றுள்ளனர்.
அங்கு கஞ்சா விற்பவர்களிடம் கஞ்சா வாங்கி கொண்டு இங்கு வந்துள்ளனர். பிடிபட்ட 6 சிறுவர்களில் 2 பேர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பும், மற்றவர்கள் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியிலும் படித்து வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 6 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் அருகே உள்ள வீரபாண்டி எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஜெ.ஜெ.நகர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே 6 சிறுவர்கள் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தனர்.
இதை பார்த்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்களிடம் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் இதுகுறித்து அவர்களிடம் விசாரித்தனர்.ஆனால் அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை. இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் 6 பேரும் ரூ.6 ஆயிரத்தை எடுத்து கொண்டு திண்டுக்கல்லுக்கு சென்றுள்ளனர்.
அங்கு கஞ்சா விற்பவர்களிடம் கஞ்சா வாங்கி கொண்டு இங்கு வந்துள்ளனர். பிடிபட்ட 6 சிறுவர்களில் 2 பேர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பும், மற்றவர்கள் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியிலும் படித்து வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 6 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X