என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாய்-தந்தை தகராறில் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்18 Dec 2019 12:25 PM GMT (Updated: 18 Dec 2019 12:25 PM GMT)
குடவாசலில் தாய்-தந்தை தகராறில் மனமுடைந்த கல்லூரி மாணவர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவாரூர்:
குடவாசல் காவல் சரகம் வீதிவிடங்கன் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் மகன் சிவசங்கரன். இவர் பூண்டியில் உள்ள கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். வீட்டில் அடிக்கடி தாய்-தந்தையரிடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சிவசங்கரன் மனமுடைந்து இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்றும் இருவருக்கு மிடையே தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த சிவசங்கரன் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து அவரது உறவினர் துரை குடவாசல் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X