search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    தாய்-தந்தை தகராறில் கல்லூரி மாணவர் வி‌ஷம் குடித்து தற்கொலை

    குடவாசலில் தாய்-தந்தை தகராறில் மனமுடைந்த கல்லூரி மாணவர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    திருவாரூர்:

    குடவாசல் காவல் சரகம் வீதிவிடங்கன் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் மகன் சிவசங்கரன். இவர் பூண்டியில் உள்ள கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். வீட்டில் அடிக்கடி தாய்-தந்தையரிடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சிவசங்கரன் மனமுடைந்து இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்றும் இருவருக்கு மிடையே தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த சிவசங்கரன் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்து அவரது உறவினர் துரை குடவாசல் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×