என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் 13 வெங்காய குடோன்களில் போலீசார் அதிரடி சோதனை
Byமாலை மலர்10 Dec 2019 10:07 AM GMT (Updated: 10 Dec 2019 10:07 AM GMT)
திருப்பூரில் வெங்காயம் மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகளின் 13 குடோன்களில் போலீசார் அதிரடி சோதனை செய்தனர்.
திருப்பூர்:
சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காய விலையை கட்டுப்படுத்த, வெங்காயம் பதுக்கல் சம்பந்தமாக குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி திருப்பூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீஅனுபல்லவி, சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா மற்றும் போலீசார் திருப்பூர் சந்தைப்பேட்டை, உடுமலை, தாராபுரம் பகுதிகளில் உள்ள வெங்காய மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகளின் 13 குடோன்களில் சோதனை செய்தனர்.
அரசு நிர்ணயம் செய்துள்ள மொத்த வியாபாரிகள் 50 டன், சில்லரை வியாபாரிகள் 10 டன் அளவுக்கு அதிகமாக வெங்காயம் பதுக்கி வைத்துள்ளார்களா? என்று போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் வெங்காயம் எதுவும் பதுக்கி வைக்கவில்லை என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அரசு அறிவித்துள்ள எடை அளவுக்கு மேல் வெங்காயத்தை யாரேனும் பதுக்கி வைத்திருந்தால் அத்தியாவசிய பண்டங்கள் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காய விலையை கட்டுப்படுத்த, வெங்காயம் பதுக்கல் சம்பந்தமாக குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி திருப்பூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீஅனுபல்லவி, சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா மற்றும் போலீசார் திருப்பூர் சந்தைப்பேட்டை, உடுமலை, தாராபுரம் பகுதிகளில் உள்ள வெங்காய மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகளின் 13 குடோன்களில் சோதனை செய்தனர்.
அரசு நிர்ணயம் செய்துள்ள மொத்த வியாபாரிகள் 50 டன், சில்லரை வியாபாரிகள் 10 டன் அளவுக்கு அதிகமாக வெங்காயம் பதுக்கி வைத்துள்ளார்களா? என்று போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் வெங்காயம் எதுவும் பதுக்கி வைக்கவில்லை என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அரசு அறிவித்துள்ள எடை அளவுக்கு மேல் வெங்காயத்தை யாரேனும் பதுக்கி வைத்திருந்தால் அத்தியாவசிய பண்டங்கள் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X