search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    வாலிபர்களை வெட்டி வழிப்பறி - சிறுவன் உள்பட 3 பேர் கைது

    ராயபுரம் அருகே வாலிபர்களை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயபுரம்:

    எண்ணூரை சேர்ந்தவர்கள் காமேஷ், லெனின், சந்துரு. இவர்கள் நேற்று முன்தினம் மாலை காசிமேடு தண்டையார் நகரில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்று விட்டு தண்டையார்பேட்டை பணிமனை அருகே நின்று கொண்டு இருந்தனர்.

    அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 3 பேர் காமேஷ் உள்பட 3 பேரிடம் தகராறில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் காமேஷ், சந்துரு, லெனின் ஆகிய 3 பேரையும் அரிவாளால் வெட்டி ரூ.11 ஆயிரம், செல்போன் ஆகியவற்றை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட அதே பகுதி வ.வு.சி. நகரை சேர்ந்த அஜய், டேனி மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
    Next Story
    ×