என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜபாளையத்தில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை
Byமாலை மலர்9 Dec 2019 9:58 AM GMT (Updated: 9 Dec 2019 9:58 AM GMT)
மதுவில் விஷம் கலந்து குடித்து ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்தார்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சிபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் கோபால் (வயது 48). மத்திய ரிசர்வ் படையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
தற்போது தனியார் நூற்பாலையில் காவலாளியாக வேலை பார்த்து வந்த கோபால், மது பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
மது பழக்கத்தை கைவிடும் படி மனைவி தனலட்சுமி பலமுறை கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த கோபால், மது பழக்கத்தை கைவிட முடியாமல் தவித்தார்.
வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் மதுவில் விஷம் கலந்து குடித்தார். சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட கோபால், அங்கு பரிதாபமாக இறந்தார்.
தனலட்சுமி புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X