search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை (கோப்புப்படம்)
    X
    கொள்ளை (கோப்புப்படம்)

    திருமங்கலத்தில் வீட்டின் கதவை உடைத்து 11 பவுன் நகை-பணம் கொள்ளை

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வீட்டின் கதவை உடைத்து 11 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமங்கலம்:

    திருமங்கலம் முகமதுஷா புரத்தைச் சேர்ந்தவர் பிஸ்மில்லாகான் (வயது 51). இவர் கார் பெயிண்டிங் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நசீமா பேகம் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    நேற்று இரவு வழக்கம் போல் பிஸ்மில்லாகான், தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கினார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் வெளிப்புற மின் விளக்கை உடைத்தனர்.

    பின்னர் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் நைசாக அங்கிருந்த 11 பவுன் நகை, ரூ.2ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர்.

    அதிகாலையில் எழுந்த நசீமாபேகம் கதவு உடைக்கப்பட்டு நகை, பணம் திருட்டு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்து திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம் நகர் பகுதியில் தொடர்ந்து நகை பறிப்பு மற்றும் நகை கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவதால் கூடுதலாக போலீசார் நியமித்து பணியாற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
    Next Story
    ×