என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமங்கலத்தில் வீட்டின் கதவை உடைத்து 11 பவுன் நகை-பணம் கொள்ளை
Byமாலை மலர்6 Dec 2019 9:41 AM GMT (Updated: 6 Dec 2019 9:41 AM GMT)
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வீட்டின் கதவை உடைத்து 11 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்:
திருமங்கலம் முகமதுஷா புரத்தைச் சேர்ந்தவர் பிஸ்மில்லாகான் (வயது 51). இவர் கார் பெயிண்டிங் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நசீமா பேகம் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
நேற்று இரவு வழக்கம் போல் பிஸ்மில்லாகான், தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கினார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் வெளிப்புற மின் விளக்கை உடைத்தனர்.
பின்னர் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் நைசாக அங்கிருந்த 11 பவுன் நகை, ரூ.2ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர்.
அதிகாலையில் எழுந்த நசீமாபேகம் கதவு உடைக்கப்பட்டு நகை, பணம் திருட்டு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
திருமங்கலம் நகர் பகுதியில் தொடர்ந்து நகை பறிப்பு மற்றும் நகை கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவதால் கூடுதலாக போலீசார் நியமித்து பணியாற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
திருமங்கலம் முகமதுஷா புரத்தைச் சேர்ந்தவர் பிஸ்மில்லாகான் (வயது 51). இவர் கார் பெயிண்டிங் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நசீமா பேகம் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
நேற்று இரவு வழக்கம் போல் பிஸ்மில்லாகான், தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கினார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் வெளிப்புற மின் விளக்கை உடைத்தனர்.
பின்னர் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் நைசாக அங்கிருந்த 11 பவுன் நகை, ரூ.2ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர்.
அதிகாலையில் எழுந்த நசீமாபேகம் கதவு உடைக்கப்பட்டு நகை, பணம் திருட்டு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
திருமங்கலம் நகர் பகுதியில் தொடர்ந்து நகை பறிப்பு மற்றும் நகை கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவதால் கூடுதலாக போலீசார் நியமித்து பணியாற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X