என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெள்ளகோவில் அருகே விபத்து- ஒர்க்ஷாப் உரிமையாளர் பலி
Byமாலை மலர்6 Dec 2019 9:26 AM GMT (Updated: 6 Dec 2019 9:26 AM GMT)
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒர்க்ஷா உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வெள்ளகோவில்:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை தோப்பு பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மகன் கருணாகரன் (வயது 37). பெருந்துறை சிப்காட் லேத் உரிமையாளர்.
கருணாகரன் திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பில் உள்ள கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அங்கு சாமி தரிசனம் முடிந்த பின்னர் மீண்டும் ஊருக்கு புறப்பட்டார்.
மோட்டார் சைக்கிள் வெள்ளகோவிலை கடந்து கரூர்- கோவை ரோட்டில் உள்ள ஓலப்பாளையம் வந்தது. அப்போது சாலையோரத்தில் ஒரு சிமெண்ட் லாரி பழுதாகி நின்றது. மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அந்த லாரி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கருணாகரன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
அக்கம் பக்கத்தினர் கருணாகரனை மீட்டு காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை தோப்பு பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மகன் கருணாகரன் (வயது 37). பெருந்துறை சிப்காட் லேத் உரிமையாளர்.
கருணாகரன் திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பில் உள்ள கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அங்கு சாமி தரிசனம் முடிந்த பின்னர் மீண்டும் ஊருக்கு புறப்பட்டார்.
மோட்டார் சைக்கிள் வெள்ளகோவிலை கடந்து கரூர்- கோவை ரோட்டில் உள்ள ஓலப்பாளையம் வந்தது. அப்போது சாலையோரத்தில் ஒரு சிமெண்ட் லாரி பழுதாகி நின்றது. மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அந்த லாரி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கருணாகரன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
அக்கம் பக்கத்தினர் கருணாகரனை மீட்டு காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X