என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சூலூர் அருகே சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
Byமாலை மலர்30 Nov 2019 5:08 AM GMT (Updated: 30 Nov 2019 5:08 AM GMT)
சூலூர் அருகே 17 வயது சிறுமியை ஏமாற்றி கர்ப்பிணியாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
கோவை:
திண்டுக்கல் மாவட்டம் கோட்டையூர் கொடுவம்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 21). இவர் சூலூர் காங்கயம் பாளையத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனி குடியிருப்பில் தங்கி அங்கு 5 வருடங்களாக பனியன் கட்டிங் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். அதே கம்பெனியில் 17 வயது சிறுமி பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. சம்பவத்தன்று சுரேஷ் அந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி தனது அறைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த நிலையில் சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அப்போது டாக்டர் அந்த சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறினார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து அந்த சிறுமியிடம் கேட்டனர். அப்போது அவர் நடந்த சம்பவங்கள் குறித்து கூறினார். இதையடுத்து சிறுமியின்பெற்றோர் சூலூர் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து சுரேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கோட்டையூர் கொடுவம்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 21). இவர் சூலூர் காங்கயம் பாளையத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனி குடியிருப்பில் தங்கி அங்கு 5 வருடங்களாக பனியன் கட்டிங் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். அதே கம்பெனியில் 17 வயது சிறுமி பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. சம்பவத்தன்று சுரேஷ் அந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி தனது அறைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த நிலையில் சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அப்போது டாக்டர் அந்த சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறினார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து அந்த சிறுமியிடம் கேட்டனர். அப்போது அவர் நடந்த சம்பவங்கள் குறித்து கூறினார். இதையடுத்து சிறுமியின்பெற்றோர் சூலூர் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து சுரேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X