search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை (கோப்புப்படம்)
    X
    மழை (கோப்புப்படம்)

    புதுவையில் தொடர் மழை- பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

    புதுவையில் பெய்து வரும் பலத்த மழையினால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 2-வது வாரத்தில் தொடங்கியது.

    வழக்கமாக அக்டோபர் மாத இறுதியில் தொடங்க வேண்டிய மழை 2 வாரம் முன்னதாக தொடங்கியது. ஆனால், பெரியளவில் மழை பெய்யவில்லை. பருவமழை தொடங்கியபோது ஓரிரு நாள் மட்டும் கனமழை பெய்தது.

    அதன்பின்னர் கோடை காலம் போல் வெயில் அடிக்க தொடங்கியது. அவ்வப்போது இரவு வேளைகளில் லேசான மழை பெய்தது.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக புதுவையில் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் தூறல் மழை பெய்து வந்தது.

    இன்று காலை 7 மணியளவில் பலத்த மழை கொட்டியது. இதுபோல் கிராமப்புற பகுதிகளிலும் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது.

    இந்த தொடர் மழையினால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. ஒருசில இடங்களில் குடியிருப்புகளிலும் மழை நீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள்.

    மேலும் இன்று காலை முதல் மழை பெய்து வருவதால் தனியார் பள்ளி மாணவர்கள் பெரும் அவதி அடைந்தனர். மேலும் தொடர் மழையினால் புதுவையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×