என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நோனாங்குப்பம் பாலத்தில் பெண்ணிடம் நகையை பறித்து சென்ற கொள்ளையர்கள்
Byமாலை மலர்28 Nov 2019 12:05 PM GMT (Updated: 28 Nov 2019 12:05 PM GMT)
நோனாங்குப்பம் பாலத்தில் கணவனுடன் மோட்டார் சைக்கிளில் வந்த பெண்ணிடம் நகையை பறித்து சென்ற ஹெல்மெட் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
பாகூர்:
தவளக்குப்பம் அருகே நல்லவாடு கிழக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. மீனவர். இவரது மனைவி வாணி (வயது40). கணவன்- மனைவி இருவரும் நேற்று மாலை புதுவை சென்று விட்டு பின்னர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.
நோனாங்குப்பம் பாலத்தில் வந்தபோது பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்து 2 கொள்ளையர்கள் திடீரென கிருஷ்ணமூர்த்தியை வழிமறித்தனர். பின்னர் வாணி கழுத்தில் அணிந்திருந்த 2 1/2 பவுன்செயினை பறித்தனர். கிருஷ்ணமூர்த்தியும் அவரது மனைவி வாணியும் திருடன்.... திருடன் என அலறுவதற்குள் கொள்ளையர்கள் 2 பேரும் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். பறிபோன செயினின் மதிப்பு ரூ.50 ஆயிரமாகும்.
இது குறித்து கிருஷ்ணமூர்த்தி தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X