search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    திருப்பூரில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த பெண் உள்பட 3 பேர் கைது

    திருப்பூரில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் காலேஜ் ரோடு பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது அங்கு போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்ற பெண் உள்பட 3 பேரை விரட்டி சென்று பிடித்தனர். விசாரணையில் அவர்கள் திருப்பூர் காலேஜ் ரோடு ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த வசந்தி (55).

    அவரது மருமகன் சுரேஷ் (27). அதே பகுதியை சேர்ந்த சிவா என்கிற சிவராமன் (25) என்பது தெரியவந்தது.

    இவர்களிடம் தொடர்ந்து விசாரித்தபோது திருப்பூர் காலேஜ் ரோட்டில் ஆங்காங்கே நின்று கொண்டு கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து 3பேரையும் கைது செய்தனர் அவர்களிடம் இருந்து 3 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×