என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முல்லைப்பெரியாறு அணையில் துணைக்கண்காணிப்பு குழு ஆய்வு
Byமாலை மலர்19 Nov 2019 9:08 AM GMT
முல்லைப்பெரியாறு அணையில் மத்திய துணை கண்காணிப்பு குழு இன்று ஆய்வு செய்தனர்.
கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அணையை கண்காணித்து பராமரிக்க உச்சநீதிமன்றம் சார்பில் 3 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. இக்குழுவிற்கு உதவியாக 5 பேர் கொண்ட துணைக்குழுவும் நியமிக்கப்பட்டனர்.
அதன் தலைவராக கொச்சி மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் உள்ளார். தமிழக பிரதிநிகளாக பெரியாறு சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சுப்பிரமணி, உதவி செயற்பொறியாளர் சாம்இர்வின், கேரள பிரதிநிதிகளாக அருண்ஜேக்கப், பிரசீது ஆகியோர் உள்ளனர்.
கடந்த செப்டம்பர் 4-ந் தேதி அணையின் நீர்மட்டம் 125.60 அடியாக இருந்தபோது இக்குழுவினர் ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து தொடர் மழை பெய்து அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் தற்போது பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 128.45 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 1703 கன அடியாகவும், திறப்பு 1600 கன அடியாகவும் உள்ளது. 4363 மி.கன அடி நீர் உள்ளது.
இந்நிலையில் பெரியாறு அணைக்கு வந்த துணைக்குழு மெயின் அணை, பேபி அணை கேலரி, மதகு, நீர்வரத்து, நீர் வெளியேற்றம், நீர் கசிவு குறித்து ஆய்வு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து மாலையில் குமுளியில் உள்ள பெரியாறு அணை கண்காணிப்பு குழு அலுவலகத்தில் துணைக்குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் வல்லக்கடவு பாதை, சீரமைப்பு, பேபி அணையை பலப்படுத்துதல் அணைக்கு மின் இணைப்பு கொண்டு வருவது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அணையை கண்காணித்து பராமரிக்க உச்சநீதிமன்றம் சார்பில் 3 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. இக்குழுவிற்கு உதவியாக 5 பேர் கொண்ட துணைக்குழுவும் நியமிக்கப்பட்டனர்.
அதன் தலைவராக கொச்சி மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் உள்ளார். தமிழக பிரதிநிகளாக பெரியாறு சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சுப்பிரமணி, உதவி செயற்பொறியாளர் சாம்இர்வின், கேரள பிரதிநிதிகளாக அருண்ஜேக்கப், பிரசீது ஆகியோர் உள்ளனர்.
கடந்த செப்டம்பர் 4-ந் தேதி அணையின் நீர்மட்டம் 125.60 அடியாக இருந்தபோது இக்குழுவினர் ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து தொடர் மழை பெய்து அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் தற்போது பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 128.45 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 1703 கன அடியாகவும், திறப்பு 1600 கன அடியாகவும் உள்ளது. 4363 மி.கன அடி நீர் உள்ளது.
இந்நிலையில் பெரியாறு அணைக்கு வந்த துணைக்குழு மெயின் அணை, பேபி அணை கேலரி, மதகு, நீர்வரத்து, நீர் வெளியேற்றம், நீர் கசிவு குறித்து ஆய்வு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து மாலையில் குமுளியில் உள்ள பெரியாறு அணை கண்காணிப்பு குழு அலுவலகத்தில் துணைக்குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் வல்லக்கடவு பாதை, சீரமைப்பு, பேபி அணையை பலப்படுத்துதல் அணைக்கு மின் இணைப்பு கொண்டு வருவது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X