என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
5 புதிய மாவட்டங்களை எடப்பாடி பழனிசாமி நேரில் தொடங்கி வைக்கிறார்
சென்னை:
தமிழ்நாட்டில் நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்கும் பணியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டு மாவட்டம், வேலூர் மாவட்டத்தை 3 ஆக பிரித்து வேலூர், மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டம், ராணிப்பேட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 5 புதிய மாவட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான விழா தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தென்காசி மாவட்டத்தை வருகிற 22-ந்தேதி (வெள்ளி) காலை 9.30 மணிக்கு தொடங்கி வைக்கிறார். இதற்காக தென்காசியில் பிரம்மாண்ட விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் மதுரை சென்று அங்கிருந்து கார் மூலம் தென்காசி சென்று விழாவில் பங்கேற்கிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட தொடக்க விழா வருகிற 27-ந்தேதி காலை 10.45 மணிக்கு கள்ளக்குறிச்சியில் நடைபெறுகிறது. இந்த விழாவிலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று மாவட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் தொடக்க விழா 28-ந்தேதி காலை 10 மணிக்கு நடை பெறுகிறது. இதிலும் முதல்வர் நேரில் சென்று கலந்து கொள்கிறார்.
செங்கல்பட்டு மாவட்ட தொடக்க விழா செங்கல்பட்டில் 29-ந்தேதி பகல் 12.15 மணி அளவில் நடைபெறுகிறது. இதிலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பங்கேற்று புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றுகிறார்.
புதிய மாவட்டங்களுக்கான கலெக்டர் அலுவலகம் அமையும் இடங்களை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்ய உள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை ஆய்வு நடைபெறுகிறது. தென்காசியில் 20-ந்தேதியும், திருப்பத்தூர், ராணிப்பேட்டையில் 23-ந்தேதியும், கள்ளக்குறிச்சியில் 24-ந்தேதியும் அமைச்சர் உதயகுமார் ஆய்வு பணிகளை மேற்கொள்கிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்