search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    திருவல்லிக்கேணியில் வாகன சோதனை: காரில் இருந்த 6 லேப்டாப், வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்

    திருவல்லிக்கேணியில் இன்று ஒரு காரை சோதனை செய்த போலீசார் அதிலிருந்து 6 லேப்டாப் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
    சென்னை:

    திருவல்லிக்கேணி போலீசார் இன்று காலை போலீஸ் நிலையம் முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த காரை சோதனை செய்தபோது காரின் பின்புறம் அட்டைப்பெட்டிகளில் 6 லேப்டாப்கள், 20 பெட்டிகளில் சிகரெட்டுகள், ஜிம்பவுடர் பொருட்கள் ஆகியவை இருந்தன.

    இதுகுறித்து காரில் இருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது இலியாஸ், சையது முஜாஹிதின், கார் டிரைவரான சூர்யா ஆகியோரிடம் விசாரித்தனர். அப்போது அவை துபாயில் இருந்து வாங்கிவரப்பட்டது தெரியவந்தது. அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×