என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் முதலிபாளையம் பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு 12 பேர் பாதிப்பு
Byமாலை மலர்12 Nov 2019 9:54 AM GMT (Updated: 12 Nov 2019 9:54 AM GMT)
திருப்பூர் சிட்கோ பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு 12 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் முதலிப்பாளையம் சிட்கோவில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் உள்ளன.
இங்கு வடமாநில தொழிலாளர்கள் உள்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அப்பகுதியில் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். திருப்பூர் முதலிப்பாளையம் பகுதியில் தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதுவரை இப்பகுதியில் 12 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் கோவை மற்றும் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து அப்பகுதியில் மாவட்ட சுகாதார பணியாளர்கள் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் வீடு, வீடாக சென்று டெங்கு கொசு புழு உள்ளதா? என கண்காணித்து வருகிறார்கள்.
டெங்கு காய்ச்சல் பரவி வருவதை தொடர்ந்து முதலிப்பாளையம் பகுதிக்கு கூடுதல் சுகாதார பணியாளர்களை மாவட்ட நிர்வாகம் நியமித்து உள்ளது.
முதலிப்பாளையம் பகுதியில் 4 சுகாதார மையங்கள் உள்ளது. இங்குள்ள ஒவ்வொரு சுகாதார நிலையங்களுக்கும் கூடுதலாக ஒரு சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் கொசு ஒழிப்பு பணியில் கூடுதலாக 48 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். 500 வீடுகளுக்கு ஒரு சுகாதார ஆய்வாளர்கள், 12 கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு தினமும் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்து வருகிறார்கள்.
திருப்பூர் முதலிப்பாளையம் சிட்கோவில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் உள்ளன.
இங்கு வடமாநில தொழிலாளர்கள் உள்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அப்பகுதியில் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். திருப்பூர் முதலிப்பாளையம் பகுதியில் தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதுவரை இப்பகுதியில் 12 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் கோவை மற்றும் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து அப்பகுதியில் மாவட்ட சுகாதார பணியாளர்கள் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் வீடு, வீடாக சென்று டெங்கு கொசு புழு உள்ளதா? என கண்காணித்து வருகிறார்கள்.
டெங்கு காய்ச்சல் பரவி வருவதை தொடர்ந்து முதலிப்பாளையம் பகுதிக்கு கூடுதல் சுகாதார பணியாளர்களை மாவட்ட நிர்வாகம் நியமித்து உள்ளது.
முதலிப்பாளையம் பகுதியில் 4 சுகாதார மையங்கள் உள்ளது. இங்குள்ள ஒவ்வொரு சுகாதார நிலையங்களுக்கும் கூடுதலாக ஒரு சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் கொசு ஒழிப்பு பணியில் கூடுதலாக 48 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். 500 வீடுகளுக்கு ஒரு சுகாதார ஆய்வாளர்கள், 12 கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு தினமும் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X