என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேத்தி காதல் விவகாரம்: சமரசம் பேச சென்ற தாத்தா,பாட்டிக்கு அடி - 2 பேர் கைது
Byமாலை மலர்11 Nov 2019 2:01 PM GMT (Updated: 11 Nov 2019 2:01 PM GMT)
பேத்தி காதல் விவகாரத்தில் சமரசம் பேசச் சென்ற தாத்தா-பாட்டியை தாக்கியதாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
சிலைமானை அடுத்த மேலசக்குடியைச் சேர்ந்த கண்ணன் மனைவி சக்தி (வயது38). இவர்களுக்கு 2 மகள், 1 மகன் உள்ளனர். இதில் மூத்த மகள் நந்தினி மதுரை தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ஆனந்த் என்பவர் நந்தினியை காதலித்து வருகிறார். இது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.
இதற்கிடையில் மேலசக்குடி தண்டல்காரர் முத்து இருளன் வீட்டில் நேற்று சமரச பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சக்தி, அவரது மாமனார் அம்மாசி (75), மாமியார் மாரத்தி (70) ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் வலுத்து சண்டையாக மாறியது. இதில் அம்மாசி, மாரத்தி ஆகிய 2 பேருக்கும் சரமாரி உருட்டுக்கட்டை அடி விழுந்தது. மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக சக்தி சிலைமான் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் வழக்குப்பதிவு செய்து பழனி, பூவலிங்கம் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சிலைமானை அடுத்த மேலசக்குடியைச் சேர்ந்த கண்ணன் மனைவி சக்தி (வயது38). இவர்களுக்கு 2 மகள், 1 மகன் உள்ளனர். இதில் மூத்த மகள் நந்தினி மதுரை தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ஆனந்த் என்பவர் நந்தினியை காதலித்து வருகிறார். இது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.
இதற்கிடையில் மேலசக்குடி தண்டல்காரர் முத்து இருளன் வீட்டில் நேற்று சமரச பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சக்தி, அவரது மாமனார் அம்மாசி (75), மாமியார் மாரத்தி (70) ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் வலுத்து சண்டையாக மாறியது. இதில் அம்மாசி, மாரத்தி ஆகிய 2 பேருக்கும் சரமாரி உருட்டுக்கட்டை அடி விழுந்தது. மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக சக்தி சிலைமான் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் வழக்குப்பதிவு செய்து பழனி, பூவலிங்கம் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X