search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை (கோப்புப்படம்)
    X
    மேட்டூர் அணை (கோப்புப்படம்)

    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

    மேட்டூர் அணையில் இன்று காலை முதல் காவிரியில் 16 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 600 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு உள்ளது.
    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வந்தது. நேற்று 6 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 6 ஆயிரத்து 205 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த வாரம் மழை பெய்ததால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு நேற்று காவிரியில் 5 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கால்வாயில் 600 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை குறைந்ததால் பாசனத்திற்கு தண்ணீர் தேவை அதிகரித்தது. இதையடுத்து இன்று காலை முதல் காவிரியில் 16 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 600 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் மீண்டும் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இதுவரை அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டதால் மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை வரை 120 அடியாக நீடித்தது. இன்று காலை முதல் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் இனி வரும் நாட்களில் வேகமாக சரியும் நிலை ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×