என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
Byமாலை மலர்7 Nov 2019 4:32 AM GMT (Updated: 7 Nov 2019 4:32 AM GMT)
மேட்டூர் அணையில் இன்று காலை முதல் காவிரியில் 16 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 600 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு உள்ளது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வந்தது. நேற்று 6 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 6 ஆயிரத்து 205 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த வாரம் மழை பெய்ததால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு நேற்று காவிரியில் 5 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கால்வாயில் 600 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வந்தது.
இந்தநிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை குறைந்ததால் பாசனத்திற்கு தண்ணீர் தேவை அதிகரித்தது. இதையடுத்து இன்று காலை முதல் காவிரியில் 16 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 600 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் மீண்டும் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதுவரை அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டதால் மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை வரை 120 அடியாக நீடித்தது. இன்று காலை முதல் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் இனி வரும் நாட்களில் வேகமாக சரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வந்தது. நேற்று 6 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 6 ஆயிரத்து 205 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த வாரம் மழை பெய்ததால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு நேற்று காவிரியில் 5 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கால்வாயில் 600 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வந்தது.
இந்தநிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை குறைந்ததால் பாசனத்திற்கு தண்ணீர் தேவை அதிகரித்தது. இதையடுத்து இன்று காலை முதல் காவிரியில் 16 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 600 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் மீண்டும் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதுவரை அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டதால் மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை வரை 120 அடியாக நீடித்தது. இன்று காலை முதல் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் இனி வரும் நாட்களில் வேகமாக சரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X