search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாலிபர் மாயம்
    X
    வாலிபர் மாயம்

    நாங்குநேரி அருகே வாலிபர் மாயம் - போலீசார் விசாரணை

    நாங்குநேரி அருகே வாலிபர் மாயமான சம்பவத்தையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சங்கரன் (வயது 49), விவசாயி. இவரது மகன் முருகேஷ் (28). இவர் சென்னையில் உள்ள சுவீட் கடையில் மாஸ்டராக உள்ளார். முருகேஷ் கடந்த மாதம் 17-ந் தேதி விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். பின்னர் விடுமுறை முடிந்த கடந்த 27-ந் தேதி மாலையில் சென்னைக்கு வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றார். ஆனால் அவர் சென்னைக்கு செல்லவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சங்கரன் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இது குறித்து சங்கரன் விஜயநாராயணம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேஷ் எங்கு சென்றார்? என்ன ஆனார் ? என்பது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×