என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவாரூரில் திருவள்ளுவர் சிலை அவமதிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்6 Nov 2019 9:38 AM GMT (Updated: 6 Nov 2019 9:38 AM GMT)
பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர்:
தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர், மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் துரை.அருள்ராஜன் தலைமை தாங்கினார். மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
திருவள்ளுவர் படத்தை காவி நிற அடையாளத்தோடு சமூக வலைதளத்தில் வெளியிட்டு சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கிய பா.ஜனதா கட்சியினரை கண்டித்தும், தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்த சமூக விரோதிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர், மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் துரை.அருள்ராஜன் தலைமை தாங்கினார். மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
திருவள்ளுவர் படத்தை காவி நிற அடையாளத்தோடு சமூக வலைதளத்தில் வெளியிட்டு சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கிய பா.ஜனதா கட்சியினரை கண்டித்தும், தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்த சமூக விரோதிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X