என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் நர்சு உள்பட 2 பேர் மாயம்
Byமாலை மலர்5 Nov 2019 9:46 AM GMT (Updated: 5 Nov 2019 9:46 AM GMT)
மதுரையில் நர்சு உள்பட 2 பேர் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மகள் ரோகிணி (வயது 20). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார்.
கடந்த 3-ந் தேதி காலையில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற ரோகிணி ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் மாயமானார். இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் பலனில்லை.
இது குறித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
மதுரை சம்மட்டிபுரம், முல்லைத்தெருவைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் அருண் பாண்டி. இவர் பசுமலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இதற்காக பள்ளியின் விடுதியில் தங்கியிருந்தார்.
சம்பவத்தன்று விடுதியில் இருந்து பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற அருண்பாண்டி மாயமானார். வீட்டுக்கும் அவர் செல்லவில்லை.
இது குறித்த புகாரின் பேரில் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரை தேடி வருகின்றனர்.
மதுரை ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மகள் ரோகிணி (வயது 20). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார்.
கடந்த 3-ந் தேதி காலையில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற ரோகிணி ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் மாயமானார். இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் பலனில்லை.
இது குறித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
மதுரை சம்மட்டிபுரம், முல்லைத்தெருவைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் அருண் பாண்டி. இவர் பசுமலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இதற்காக பள்ளியின் விடுதியில் தங்கியிருந்தார்.
சம்பவத்தன்று விடுதியில் இருந்து பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற அருண்பாண்டி மாயமானார். வீட்டுக்கும் அவர் செல்லவில்லை.
இது குறித்த புகாரின் பேரில் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X