search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மதகடிப்பட்டில் மோட்டார் சைக்கிள் திருடர்கள் கைது

    மதகடிப்பட்டில் மோட்டார் சைக்கிள்களை திருடிய 2 வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
    திருபுவனை:

    திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் நேற்று மாலை மதகடிப்பட்டு ரவுண்டானா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

    அவர்கள் ஓட்டி வந்த வாகனத்துக்கான உரிய சான்றிதழ் எதுவும் வைத்திருக்கவில்லை. மேலும் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

    இதையடுத்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் வளவனூர் அருகே பக்கமேடு கிராமத்தை சேர்ந்த மணிவண்ணன் (32) மற்றும் விழுப்புரம் காணை பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் (25) என்பதும், நண்பர்களான இவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சன்னியாசி குப்பம்- திருக்கனூர் சாலையில் திருடி வந்ததும் தெரிய வந்தது தெரிய வந்தது.

    மேலும் விசாரணையில் இது மட்டுமல்லாது இவர்கள் இன்னொரு மோட்டார் சைக்கிளை திருடி பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து இவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×