search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    பூந்தமல்லி அருகே தொழிலதிபர் வீட்டில் 17 பவுன் நகை கொள்ளை

    பூந்தமல்லி அருகே தொழிலதிபர் வீட்டில் இருந்து 17 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பூந்தமல்லி:

    பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, வரதராஜ புரத்தை சேர்ந்தவர் ரவி (42). தொழில்அதிபர். நேற்று இவர் கதவை திறந்து வைத்து விட்டு தூங்கி விட்டார். மாலையில் எழுந்து பார்த்தபோது பீரோ திறந்த நிலையில் இருந்தது. அதிலிருந்த 17 பவுன் தங்க நகை மற்றும் பணம் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து நசரப்பேட்டை காவல் நிலையத்தில் ரவி புகார் அளித்தார். வீட்டின் அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தை சேர்ந்த அரவிந்த் என்பவர் வீட்டிலும் 9 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து மாங்காடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
    Next Story
    ×