என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவொற்றியூரில் பெண் மர்மமரணம்- கணவரிடம் விசாரணை
Byமாலை மலர்5 Nov 2019 7:39 AM GMT (Updated: 5 Nov 2019 7:39 AM GMT)
திருவொற்றியூரில் பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர் ராஜேஸ்வரி நகரில் வசித்து வருபவர் ஏழுமலை கண்டெய்னர் லாரி உரிமையாளர்.
இவரது மனைவி வனிதா (வயது 32). நேற்று முன்தினம் வனிதா திடீரென வீட்டில் உயிரிழந்தார். உடனடியாக அவரது உடலை ஏழுமலை ஆம்புலன்ஸ் மூலம் தனது சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கோவிலூர் என்ற கிராமத்திற்கு எடுத்துச் சென்றார்.
அங்கு உறவினர்கள் கேட்டபோது வனிதா உடல் நலம் சரியில்லாமல் இறந்துவிட்டதாக கூறினார். இதில் சந்தேகம் அடைந்த வனிதாவின் தந்தை குப்புசாமி திருவண்ணாமலை போலீசில் புகார் செய்தார். அதில், மகள் வனிதாவின் சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
இதுபற்றி திருவண்ணாமலை போலீசார் திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் வனிதாவின் உடலை மீண்டும் ஆம்புலன்ஸ் மூலம் திருவொற்றியூருக்கு அனுப்பி வைத்தனர்.
திருவொற்றியூர் போலீசார் வனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வனிதாவின் கணவர் ஏழுமலையிடம் விசாரணை நடக்கிறது.
திருவொற்றியூர் ராஜேஸ்வரி நகரில் வசித்து வருபவர் ஏழுமலை கண்டெய்னர் லாரி உரிமையாளர்.
இவரது மனைவி வனிதா (வயது 32). நேற்று முன்தினம் வனிதா திடீரென வீட்டில் உயிரிழந்தார். உடனடியாக அவரது உடலை ஏழுமலை ஆம்புலன்ஸ் மூலம் தனது சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கோவிலூர் என்ற கிராமத்திற்கு எடுத்துச் சென்றார்.
அங்கு உறவினர்கள் கேட்டபோது வனிதா உடல் நலம் சரியில்லாமல் இறந்துவிட்டதாக கூறினார். இதில் சந்தேகம் அடைந்த வனிதாவின் தந்தை குப்புசாமி திருவண்ணாமலை போலீசில் புகார் செய்தார். அதில், மகள் வனிதாவின் சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
இதுபற்றி திருவண்ணாமலை போலீசார் திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் வனிதாவின் உடலை மீண்டும் ஆம்புலன்ஸ் மூலம் திருவொற்றியூருக்கு அனுப்பி வைத்தனர்.
திருவொற்றியூர் போலீசார் வனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வனிதாவின் கணவர் ஏழுமலையிடம் விசாரணை நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X