என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கந்திகுப்பம் அருகே குழந்தைக்கு கட்டி- மனமுடைந்த தாய் தற்கொலை
Byமாலை மலர்4 Nov 2019 2:17 PM GMT (Updated: 4 Nov 2019 2:17 PM GMT)
கந்திகுப்பம் அருகே குழந்தைக்கு மூளையில் கட்டி ஏற்பட்டுள்ளதால் மனமுடைந்த தாய் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மவாட்டம், பர்கூர் அருகே உள்ள வானியம்பாடி ரோடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(30). இவருக்கு கார்த்திகா(28) என்பவருடன் திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு பிறந்த நாள் முதலே மூளையில் கட்டி ஏற்பட்டு சிகிச்சையளித்து வந்துள்ளனர். தனது குழந்தைக்கு மூளையில் கட்டி ஏற்பட்டு கஷ்ட்டப்ட்டு வருவதை பார்த்த கார்த்திகா மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மனமுடைந்து காணப்பட்ட கார்த்திகா பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளியில் உள்ள தந்தை வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனவேதனையில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த கந்திகுப்பம் போலீசார் கார்த்திகா உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X