search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    திருவண்ணாமலையில் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கருவூல அதிகாரி சிக்கினார்

    திருவண்ணாமலையில் ஓய்வூதியம் வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கருவூல அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையை சேர்ந்தவர் இன்பராஜ் (வயது51). வக்கீல். இவருடைய தந்தை பெரியநாயகம் காவல் துறையில் அமைச்சு பணியாளராக வேலை செய்தவர். இவர் கடந்த ஆண்டு இறந்து விட்டார்.

    தனது தயாருக்கு ஓய்வூதியம் பெற மாவட்ட கருவூல அலுவலக கண்காணிப்பாளர் வேல்முருகனை நாடினார்.

    அவர் ஓய்வூதியம் வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத இன்பராஜ் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

    அவர்கள் இன்பராஜிடம் ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரம் பணத்தை கொடுத்து அனுப்பினர். இன்பராஜிடம் இருந்து வேல்முருகன் பணத்தை வாங்கிய போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×