என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கோவையில் தடையை மீறி பட்டாசு வெடித்த மேலும் 3 பேர் கைது
கோவை:
தீபாவளி பண்டிகையின் போது காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அரசாணை வெளியிட்டிருந்தது. அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசாரும் எச்சரித்திருந்தனர்.பாதுகாப்பு பணிக்காக போலீசார் தீபாவளி அன்று பல இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் சரவணம்பட்டி போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தடையை மீறி அதிகாலை 2 மணிக்கு பட்டாசு வெடித்த சாப்ட்வேர் என்ஜினீயர் 4 பேர் மீது நேற்று வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதையடுத்து குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணாபுரத்தை சேர்ந்த முத்துகுமார் (29). பீளமேடு சவுரிபாளையம் 4-வது வீதியை சேர்ந்த சரவணன் (36). உடையாம்பாளையத்தை சேர்ந்த அந்தோணி ஆரோக்கியராஜா (52). ஆகிய 3 பேரும் தடையை மீறி அவரது பகுதிகளில் பட்டாசு வெடித்தாக இன்று போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்