search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கோவையில் தடையை மீறி பட்டாசு வெடித்த மேலும் 3 பேர் கைது

    கோவையில் தடையை மீறி பட்டாசு வெடித்த மேலும் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    தீபாவளி பண்டிகையின் போது காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அரசாணை வெளியிட்டிருந்தது. அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசாரும் எச்சரித்திருந்தனர்.பாதுகாப்பு பணிக்காக போலீசார் தீபாவளி அன்று பல இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் சரவணம்பட்டி போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தடையை மீறி அதிகாலை 2 மணிக்கு பட்டாசு வெடித்த சாப்ட்வேர் என்ஜினீயர் 4 பேர் மீது நேற்று வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதையடுத்து குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணாபுரத்தை சேர்ந்த முத்துகுமார் (29). பீளமேடு சவுரிபாளையம் 4-வது வீதியை சேர்ந்த சரவணன் (36). உடையாம்பாளையத்தை சேர்ந்த அந்தோணி ஆரோக்கியராஜா (52). ஆகிய 3 பேரும் தடையை மீறி அவரது பகுதிகளில் பட்டாசு வெடித்தாக இன்று போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

    Next Story
    ×