search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    மார்த்தாண்டம் அருகே இசக்கியம்மன் கோவிலில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை

    மார்த்தாண்டம் அருகே உள்ள இசக்கியம்மன் கோவிலில் உண்டியில் உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    நாகர்கோவில்:

    மார்த்தாண்டத்தை அடுத்த மருதன்கோடு பகுதியில் இசக்கியம்மன் கோவில் உள்ளது. இங்கு தினமும் காலை, மாலை இருவேளைகளில் பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

    சம்பவத்தன்று இரவு வழக்கமான பூஜைகள் முடிந்த பின்னர் கோவில் நடையை பூசாரி பூட்டிவிட்டு சென்றார். பின்னர் மறுநாள் காலை பூஜைகள் நடத்துவதற்காக பூசாரி கோவில் நடையை திறக்க வந்தார். அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். மேலும் சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜாண்விக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் கோவிலின் உள்ளே இருந்த உண்டியலை உடைத்து, அதில் இருந்த ரொக்கப்பணம் ரூ.2,500-ஐ கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது.

    மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த பகுதியில் போலீசார் தீவிர சோதனையிலும் ஈடுபட்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பூட்டு உடைக்கப்பட்ட இடம், உண்டியல் இருந்த இடங்களில் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து உண்டியல் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×