search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணல் கடத்தல்
    X
    மணல் கடத்தல்

    காட்டேரிக்குப்பம் அருகே மணல் கடத்தி வந்த டிப்பர் லாரி பறிமுதல்

    காட்டேரிக்குப்பம் அருகே மணல் கடத்தி வந்த டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    திருக்கனூர்:

    காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் நேற்று இரவு சந்தை புதுக்குப்பம் பகுதியில் ரோந்து பணி சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் அந்த வழியாக வந்த லாரியை டிரைவர் நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்தார். இதையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் அந்த லாரியை சோதனையிட்டனர். அப்போது லாரியில் மணல் நிரப்பப்பட்டு இருந்தது. குமாரப்பாளையம் சங்கராபரணி ஆற்றில் இருந்து மணல் கடத்தப்பட்டு வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் லாரியை நிறுத்தி தப்பி ஓடிய டிரைவர் தமிழக பகுதியான பக்கிரிபாளையத்தை சேர்ந்த பிரபா என்ற பிரபாகரன் என்பது ம் அந்த லாரி அதே பகுதியை சேர்ந்த சாந்தகுமாருக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது இதையடுத்து அவர்கள் 2பேர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை தேடிவருகிறார்கள்.

    Next Story
    ×