என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
காட்டேரிக்குப்பம் அருகே மணல் கடத்தி வந்த டிப்பர் லாரி பறிமுதல்
திருக்கனூர்:
காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் நேற்று இரவு சந்தை புதுக்குப்பம் பகுதியில் ரோந்து பணி சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் அந்த வழியாக வந்த லாரியை டிரைவர் நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்தார். இதையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் அந்த லாரியை சோதனையிட்டனர். அப்போது லாரியில் மணல் நிரப்பப்பட்டு இருந்தது. குமாரப்பாளையம் சங்கராபரணி ஆற்றில் இருந்து மணல் கடத்தப்பட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் லாரியை நிறுத்தி தப்பி ஓடிய டிரைவர் தமிழக பகுதியான பக்கிரிபாளையத்தை சேர்ந்த பிரபா என்ற பிரபாகரன் என்பது ம் அந்த லாரி அதே பகுதியை சேர்ந்த சாந்தகுமாருக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது இதையடுத்து அவர்கள் 2பேர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை தேடிவருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்