என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பென்சன் திட்டத்தை உருவாக்கக்கோரி தஞ்சையில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்:
இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க கூடாது. எல்.ஐ.சி. பாலிசி பிரீமியம் மற்றும் சேவைகள் மீதான ஜி.எஸ்.டியை நீக்க வேண்டும். குழு காப்பீடு வயது வரம்பைத் தளர்த்தி காப்பீடு தொகை 25 லட்சமாக உயர்த்த வேண்டும். அனைத்து முகவர்களுக்கும் மாத ஊதியம் ரூ.18 ஆயிரமும், பென்ஷன் திட்டம் உருவாக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் எல்.ஐ.சி. முகவர்களுக்கு சுங்க வரி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி முகவர்கள் சங்கம் சார்பில் தஞ்சையில் எல்.ஐ.சி அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு கோட்டத் தலைவர் தங்கமணி தலைமை தாங்கினார். கோட்ட பொதுச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தொடக்க உரையாற்றினார். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான எல்.ஐ.சி முகவர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் தென்மண்டல குழு பொறுப்பாளர் பொன்.வேலுச்சாமி நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்