என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாலியல் பலாத்கார வழக்கு- விவசாயி தூக்குபோட்டு தற்கொலை
Byமாலை மலர்16 Oct 2019 9:48 AM GMT (Updated: 16 Oct 2019 9:48 AM GMT)
சேலம் அருகே பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த கே.மோரூர் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 54). இவர் ஊரில் விவசாயம் செய்து வந்தார்.
இவர், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, அதே பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மகாலிங்கத்தை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். பின்னர் அவர் ஜெயிலில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.
தற்போது இந்த பாலியல் பலாத்கார வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதற்கான தீர்ப்பு நாளை வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தண்டனை கிடைத்து விடுமோ? என்று கருதிய மகாலிங்கம், நேற்று கதவுகளை பூட்டிகொண்டு தனது வீட்டிற்குள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அவருடைய உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், அவருடைய மனைவி மல்லிகா, கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகிறார்கள்.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த கே.மோரூர் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 54). இவர் ஊரில் விவசாயம் செய்து வந்தார்.
இவர், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, அதே பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மகாலிங்கத்தை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். பின்னர் அவர் ஜெயிலில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.
தற்போது இந்த பாலியல் பலாத்கார வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதற்கான தீர்ப்பு நாளை வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தண்டனை கிடைத்து விடுமோ? என்று கருதிய மகாலிங்கம், நேற்று கதவுகளை பூட்டிகொண்டு தனது வீட்டிற்குள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அவருடைய உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், அவருடைய மனைவி மல்லிகா, கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X