என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெங்கு கொசு உற்பத்தி- திருவாரூர் மாவட்டத்தில் 344 பேருக்கு நோட்டீஸ்
Byமாலை மலர்16 Oct 2019 9:21 AM GMT (Updated: 16 Oct 2019 9:21 AM GMT)
திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறத்தை தூய்மையின்றி வைத்திருந்ததாக 344 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளுக்கு பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. திருவாரூர் பகுதியில் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் வீடு, வணிக நிறுவனங்களில் சுற்றுப்புறங்கள் தூய்மையாக வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து கலெக்டர் ஆனந்த் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்படி திருவாரூர் துர்காலயா ரோடு பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்களை ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் தங்களது வீடுகளில் தேவையற்ற கலன்களான டயர்கள், தேங்காய் சிரட்டைகள், பிளாஸ்டிக் கப்புகள் போன்றவற்றை அப்புறப்படுத்திட வேண்டும் எனவும், காய்ச்சல் ஏற்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
பின்னர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் கூறுகையில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களிடையே விழிப்புணர்வுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறத்தை தூய்மையின்றி வைத்திருந்ததாக ரூ.1 லட்சத்து 66 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 344 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளுக்கு பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. திருவாரூர் பகுதியில் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் வீடு, வணிக நிறுவனங்களில் சுற்றுப்புறங்கள் தூய்மையாக வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து கலெக்டர் ஆனந்த் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்படி திருவாரூர் துர்காலயா ரோடு பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்களை ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் தங்களது வீடுகளில் தேவையற்ற கலன்களான டயர்கள், தேங்காய் சிரட்டைகள், பிளாஸ்டிக் கப்புகள் போன்றவற்றை அப்புறப்படுத்திட வேண்டும் எனவும், காய்ச்சல் ஏற்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
பின்னர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் கூறுகையில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களிடையே விழிப்புணர்வுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறத்தை தூய்மையின்றி வைத்திருந்ததாக ரூ.1 லட்சத்து 66 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 344 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X