search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: துணிக்கடை ஊழியர் பலி

    கோவை அருகே மோட்டார் சைக்கிளும் மொபட்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் துணிக்கடை ஊழியர் பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கவுண்டம்பாளையம்:

    கோவை கவுண்டம்பாளையம் நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 51). இவர் கோவை சிவானந்தா காலனியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று இவர் மொட்டில் சென்றார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் பாக்யராஜ் என்பவர் வந்தார். எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளும் மொபட்டும் நேருக்கு நேர் மோதின. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

    படுகாயம் அடைந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சை பலனின்றி ராமச்சந்திரன் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

    பலத்த காயங்களுடன் பாக்யராஜ் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×