search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கீழ்ப்பாக்கத்தில் மாநகராட்சி டிரைவரை ஆட்டோ ஏற்றி கொல்ல முயற்சி- 2 பேர் கைது

    சென்னை கீழ்ப்பாக்கத்தில் மாநகராட்சி டிரைவரை ஆட்டோ ஏற்றி கொல்ல முயன்றது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    சென்னை மாநகராட்சி டிரைவராக பணியாற்றுபவர் காந்தி. இவர் கடந்த 4-ந்தேதி கீழ்ப்பாக்கம் மில்லர் சாலையில் நடந்து சென்றார். அப்போது அவர் மீது ஆட்டோ ஏற்றி கொல்ல முயற்சி நடந்துள்ளது. அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இதுபற்றி கீழ்பாக்கம் போலீசில் அவர் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தியதில், புளியந்தோப்பு பகுதியில் திருட்டுதனமாக மது விற்பனை நடந்து வந்ததை காந்தி போலீசுக்கு தகவல் தெரிவித்ததால் ஆத்திரத்தில் அவரை கொல்ல திட்டமிட்டு இருந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து கீழ்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் கொலை முயற்சியில் ஈடுபட்ட தணிகைவேல், சிவா ஆகிய இருவரையும் தேடி வந்தனர்.

    செம்மஞ்சேரியில் பதுங்கி இருந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தணிகை வேல் மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் ஏற்கனவே உள்ளன. இருவரும் பேசின்பிரிட்ஜ் சிவராஜ புரத்தை சேர்ந்தவர்கள்.
    Next Story
    ×