என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அவினாசியில் பால் வாங்க சென்ற பெண்ணை தாக்கி நகை பறிப்பு
Byமாலை மலர்5 Oct 2019 4:20 AM GMT (Updated: 5 Oct 2019 4:20 AM GMT)
அவினாசியில் இன்று காலை பால் வாங்க சென்ற பெண்ணை தாக்கி 2 பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவினாசி:
அவினாசி -மங்கலம் சாலையில் அய்யப்பன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் கிரிஜா (60).
இவர் தினமும் காலையில் அங்குள்ள தோட்டத்திற்கு பால் வாங்க செல்வது வழக்கம். இதே போல் இன்று காலை பால் வாங்க நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர்.
அவர்களில் ஒருவன் ஹெல்மெட் அணிந்து இருந்தான். மற்றொருவன் குல்லா அணிந்திருந்தான். இன்னொருவன் சாதாரணமாக காணப்பட்டான்.
இவர்கள் கிரிஜா அருகே வந்த போது சாதாரணமாக இருந்த வாலிபர் கிரிஜா கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்தான். இதில் நிலை தடுமாறி கிரிஜா கீழே விழுந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்தவன் கிரிஜா கழுத்தை காலால் மிதித்து நெரித்தான். பின்னர் அவரது கழுத்தில் கிடந்த நகையை பறித்தான். கிரிஜா அதனை கெட்டியாக பிடித்து கொண்டு சத்தம் போட்டார்.
சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். இதனை பார்த்ததும் கொள்ளையர்கள் தப்பி ஓடினர். அவர்களது கையில் கிரிஜாவின் 2 பவுன் நகை சிக்கி கொண்டது. மீதி 2 பவுன் கிரிஜாவிடம் இருந்தது.
கொள்ளையர்கள் தப்பி ஓடிய போது சற்று தூரத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். பொதுமக்கள் துரத்தி வருவதை பார்த்ததும் சுதாரித்துக்கொண்ட அவர்கள் அதன் பின்னர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து அவினாசி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
அவினாசி பகுதியில் வழிப்பறி, வீடு புகுந்து நகை, பணம் திருட்டு, கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
அவினாசி -மங்கலம் சாலையில் அய்யப்பன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் கிரிஜா (60).
இவர் தினமும் காலையில் அங்குள்ள தோட்டத்திற்கு பால் வாங்க செல்வது வழக்கம். இதே போல் இன்று காலை பால் வாங்க நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர்.
அவர்களில் ஒருவன் ஹெல்மெட் அணிந்து இருந்தான். மற்றொருவன் குல்லா அணிந்திருந்தான். இன்னொருவன் சாதாரணமாக காணப்பட்டான்.
இவர்கள் கிரிஜா அருகே வந்த போது சாதாரணமாக இருந்த வாலிபர் கிரிஜா கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்தான். இதில் நிலை தடுமாறி கிரிஜா கீழே விழுந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்தவன் கிரிஜா கழுத்தை காலால் மிதித்து நெரித்தான். பின்னர் அவரது கழுத்தில் கிடந்த நகையை பறித்தான். கிரிஜா அதனை கெட்டியாக பிடித்து கொண்டு சத்தம் போட்டார்.
சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். இதனை பார்த்ததும் கொள்ளையர்கள் தப்பி ஓடினர். அவர்களது கையில் கிரிஜாவின் 2 பவுன் நகை சிக்கி கொண்டது. மீதி 2 பவுன் கிரிஜாவிடம் இருந்தது.
கொள்ளையர்கள் தப்பி ஓடிய போது சற்று தூரத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். பொதுமக்கள் துரத்தி வருவதை பார்த்ததும் சுதாரித்துக்கொண்ட அவர்கள் அதன் பின்னர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து அவினாசி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
அவினாசி பகுதியில் வழிப்பறி, வீடு புகுந்து நகை, பணம் திருட்டு, கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X