search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வத்தலக்குண்டு அருகே வீட்டில் இருந்த பொருட்களை வேனில் அள்ளி சென்ற கொள்ளையர் கைது

    வத்தலக்குண்டு அருகே சினிமா பட பாணியில் வீட்டில் இருந்த பொருட்களை வேனில் அள்ளி சென்ற கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.
    வத்தலக்குண்டு:

    கொடைக்கானலை சேர்ந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர் மணிமாறன். இவரது மனைவி சகிலா நிலக்கோட்டையில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களது வீடு நிலக்கோட்டை அருகில் உள்ள குளத்துப்பட்டி சந்தான நகரில் உள்ளது. மணிமாறன் குடும்பத்துடன் கொடைக்கானலில் வசிப்பதால் குளத்துப்பட்டி வீட்டிற்கு அவ்வப்போது சென்று வருவார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சம்பவத்தன்று அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த டி.வி., ஏ.சி. மெஷின், கட்டில் உள்பட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை நந்தா பட பாணியில் ஒருவேனில் ஏற்றி சென்றுள்னனர். 

    சம்பவத்தன்று வீட்டிற்கு வந்த மணிமாறன் பூட்டு உடைந்து கிடந்ததையும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். போலீசார் விசாரணையில் நிலக்கோட்டை பொட்டி செட்டிபட்டியை சேர்ந்த பெருமாள் (36), சிலுக்குவார்பட்டியை சேர்ந்த ரவி, ஆவாரம்பட்டியை சேர்ந்த சுப்புக்காளை ஆகியோர் சேர்ந்து வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    திருடிய பொருட்களை பெருமாள் தனது வீட்டில் வைத்து பயன்படுத்தி வந்துள்ளார். இதனையடுத்து போலீசார் பெருமாள், ரவி ஆகியோரை கைது செய்தனர். மேலும் திருடு போன பொருட்கள் அதை கொண்டு செல்ல பயன்படுத்திய வேன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து தலைமறைவாக உள்ள சுப்புகாளையை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×