search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வரதட்சணை கொடுமை
    X
    வரதட்சணை கொடுமை

    திருச்சி இளம்பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை- கணவர் குடும்பத்தினர் மீது வழக்கு

    திருச்சியில் இளம்பெண்ணை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவர் குடும்பத்தினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருச்சி:

    மும்பையை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மகள் லட்சுமி ஸ்ரீதர் (வயது 30). இவருக்கும் திருச்சியை சேர்ந்த கஜேந்திரன் என்பவரது மகன் ரோஜர் பென்னி என்பவருக்கும் கடந்த 18.8.16 ம்ஆண்டு திருமணம் நடைபெற்றது.

    அப்போது மணப்பெண் வீட்டார் தரப்பில் 50 பவுன் நகை ரூ.1.50 லட்சம் ரொக்கம் கொடுக்கப்பட்டது. ரோஜர் பென்னி சிங்கப்பூரில் கார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். திருமணமான 3 மாதத்தில் அவர் வெளிநாடு சென்று விட்டார். இந்நிலையில் லட்சுமிஸ்ரீதரிடம் ரோஜர்பென்னி குடும்பத்தினர் மேலும் கூடுதல் வரதட்சனை கேட்டு கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து நேற்று லட்சுமி ஸ்ரீதர் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் லட்சுமிஸ்ரீதரின் கணவர் ரோஜர்பென்னி, தந்தை கஜேந்திரன், தாய் காயத்திரி செல்வி உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×