search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் தங்கமணி
    X
    அமைச்சர் தங்கமணி

    தட்கலில் விவசாய மின் இணைப்புக்கு 1-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்- அமைச்சர் தங்கமணி

    தட்கலில் விவசாய மின் இணைப்பு பெறுவதற்கு வரும் 1-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
    நாமக்கல்:

    தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி நாமக்கல்லில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தட்கலில் விவசாய மின் இணைப்பு பெற அக்டோபர்  1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும்.

    டாஸ்மாக் பார்களை நடத்துவதற்கு செப்டம்பர் 30-ம் தேதி டெண்டர் விடப்படும். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விவசாயிகளுக்கு இந்த ஆண்டு தட்கல் முறையில் 10 ஆயிரம் மின் இணைப்புகள், கடந்த ஆண்டுகளில் மீதமுள்ள ஆயிரம் இணைப்புகள் என மொத்தம் 11 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என அமைச்சர் தங்கமணி சட்டசபையில் ஏற்கனவே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×