search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    கோவையில் வெவ்வேறு விபத்தில் காவலாளி உள்பட 3 பேர் பலி

    கோவையில் வெவ்வேறு விபத்தில் காவலாளி உள்பட 3 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் அப்துல் பஷீர் (வயது 54). இவர் தனியார் பஸ் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று அவர் அங்கிருந்த பஸ்சை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பஸ்சில் இருந்து கால் தவறி கீழே விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அப்துல் பஷீர் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் (53) லாரி டிரைவர். சம்பவத்தன்று இவர் வெள்ளலூர் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் கட்டுப்பாட்டை இழந்து குணசேகரன் மீது மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை குரும்பபாளையத்தை சேர்ந்தவர் பாலதண்டபாணி (வயது 59) தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் காளப்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் கட்டுப்பாட்டை இழந்து பாலதண்டபாணி மீது மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×