என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்லடம் அருகே விபத்து- வாலிபர் பலி
Byமாலை மலர்28 Sep 2019 9:37 AM GMT (Updated: 28 Sep 2019 9:37 AM GMT)
பல்லடம் அருகே கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பல்லடம்:
ராமநாதபுரம் மாவட்டம் கொக்குரணி பகுதியை சேர்ந்தவர் அபில் (வயது 26). இவர் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்த வினோத் என்பவரும் அங்கு வேலை செய்து வருகிறார். நண்பர்களான 2 பேரும் சம்பவத்தன்று தங்களது ஊரில் நடக்கும் கோவில் திருவிழாவுக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி தங்களது நண்பரான சுதர்சன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இதில் அபில் ஒரு மோட்டார் சைக்கிளிலும், வினோத் மற்றும் சுதர்சன் ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் சென்றனர்.
கோவை-திருச்சி சாலையில் பல்லடம் அருகே உள்ள ஆராக்குளம் பிரிவு அருகே சென்றனர். அப்போது திருப்பூரில் இருந்து கோவை நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக காரும் அபில் சென்ற மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் தூக்கி வீசப்பட்ட அபில் தலையில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பல்லடம் மாணிக்காபுரம் சாலையில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் பயணிகள் ஆட்டோ வைத்து ஒட்டிவருபவர் ராமகிருஷ்ணன் (30). இவர் நேற்று மாலை பூமலூர் அருகே உள்ள ஊஞ்சப்பாளையம் என்ற இடத்திற்கு சவாரி சென்றுவிட்டு, பல்லடத்திற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது ஊஞ்சப்பாளையம் பிரிவில் ஆட்டோவை திருப்ப முயன்றபோது ஆட்டோ திடீரென சறுக்கி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் வெளியில் வரமுடியாமல் ராமகிருஷ்ணன் சிக்கி கொண்டார். பலத்த காயத்துடன் கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சூலூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த இரு சம்பவங்கள் இதுகுறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கொக்குரணி பகுதியை சேர்ந்தவர் அபில் (வயது 26). இவர் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்த வினோத் என்பவரும் அங்கு வேலை செய்து வருகிறார். நண்பர்களான 2 பேரும் சம்பவத்தன்று தங்களது ஊரில் நடக்கும் கோவில் திருவிழாவுக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி தங்களது நண்பரான சுதர்சன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இதில் அபில் ஒரு மோட்டார் சைக்கிளிலும், வினோத் மற்றும் சுதர்சன் ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் சென்றனர்.
கோவை-திருச்சி சாலையில் பல்லடம் அருகே உள்ள ஆராக்குளம் பிரிவு அருகே சென்றனர். அப்போது திருப்பூரில் இருந்து கோவை நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக காரும் அபில் சென்ற மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் தூக்கி வீசப்பட்ட அபில் தலையில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பல்லடம் மாணிக்காபுரம் சாலையில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் பயணிகள் ஆட்டோ வைத்து ஒட்டிவருபவர் ராமகிருஷ்ணன் (30). இவர் நேற்று மாலை பூமலூர் அருகே உள்ள ஊஞ்சப்பாளையம் என்ற இடத்திற்கு சவாரி சென்றுவிட்டு, பல்லடத்திற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது ஊஞ்சப்பாளையம் பிரிவில் ஆட்டோவை திருப்ப முயன்றபோது ஆட்டோ திடீரென சறுக்கி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் வெளியில் வரமுடியாமல் ராமகிருஷ்ணன் சிக்கி கொண்டார். பலத்த காயத்துடன் கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சூலூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த இரு சம்பவங்கள் இதுகுறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X