search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வக்கீல் தங்கவேலு
    X
    வக்கீல் தங்கவேலு

    குமாரபாளையத்தில் உண்ணாவிரதம் இருந்த வக்கீல் திடீர் கைது

    குமாரபாளையத்தில் உண்ணாவிரதம் இருந்த வக்கீல் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களில் கடன் பெற்று, அதனை திருப்பி செலுத்த முடியாமல் பலர் தற்கொலை செய்து வருகின்றனர்.

    இப்பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தீர்வு காண வலியுறுத்தி நேற்று இரவு முதல் குமாரபாளையம் பொதுநல கூட்டமைப்பின் தலைவர் வக்கீல் தங்கவேலு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

    குமாரபாளையம் காந்தியடிகள் தெருவில் தொடங்கப்பட்ட இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

    இந்நிலையில் இன்று காலை குமாரபாளையம் போலீசார் அவரை கைது செய்து ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். குமாரபாளையத்தில் இச்சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.



    Next Story
    ×