என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சை பெரியகோவிலில் கேட்பாரற்று கிடந்த பெண் குழந்தை - போலீசார் மீட்டனர்
Byமாலை மலர்23 Sep 2019 3:47 AM GMT (Updated: 23 Sep 2019 3:47 AM GMT)
தஞ்சை பெரியகோவிலில் கேட்பாரற்று கிடந்த பெண் குழந்தையை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை பெரிய கோவில் என அழைக்கப்படும் புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோவில் மராட்டா நுழைவு வாயிலில் நேற்று முன்தினம் இரவு துணியில் சுற்றப்பட்டு கேட்பாரற்ற நிலையில் குழந்தை ஒன்று கிடந்தது. இதைக் கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் நின்ற போலீசார், அந்த பெண் குழந்தையை மீட்டனர். பின்னர் உடனே அவர்கள் குழந்தைகள் உதவி மையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற குழந்தைகள் மைய அதிகாரிகள் போலீசாரிடம் இருந்து குழந்தையை பெற்றுக்கொண்டு, தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் சேர்த்தனர்.
பிறந்து 10 நாட்களே ஆன அந்த குழந்தை நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த குழந்தையை கோவிலில் விட்டு சென்றது யார்? எதற்காக குழந்தையை கோவிலில் விட்டு சென்றார்கள்? என தஞ்சை மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை பெரிய கோவில் என அழைக்கப்படும் புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோவில் மராட்டா நுழைவு வாயிலில் நேற்று முன்தினம் இரவு துணியில் சுற்றப்பட்டு கேட்பாரற்ற நிலையில் குழந்தை ஒன்று கிடந்தது. இதைக் கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் நின்ற போலீசார், அந்த பெண் குழந்தையை மீட்டனர். பின்னர் உடனே அவர்கள் குழந்தைகள் உதவி மையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற குழந்தைகள் மைய அதிகாரிகள் போலீசாரிடம் இருந்து குழந்தையை பெற்றுக்கொண்டு, தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் சேர்த்தனர்.
பிறந்து 10 நாட்களே ஆன அந்த குழந்தை நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த குழந்தையை கோவிலில் விட்டு சென்றது யார்? எதற்காக குழந்தையை கோவிலில் விட்டு சென்றார்கள்? என தஞ்சை மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X