என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
எம்.ஜி.ஆர். நகரில் தொழிலாளி தற்கொலை- போலீசார் விசாரணை
போரூர்:
சென்னை எம்.ஜி.ஆர். நகர் சூளைப்பள்ளம் நாகாத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அந்தோனி ராஜ் (வயது 35). கூலி தொழிலாளி. இவரது மனைவி பாத்திமா. இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர்.
அந்தோணி ராஜ் கடந்த 2015-ம் ஆண்டு மரம் ஏறியபோது தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதில் அவரது முதுகு தண்டு பாதிப்படைந்து படுக்கையாக வீட்டில் இருந்து வந்தார். பாத்திமா துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வந்தார்.
கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்த அந்தோணி ராஜ் திடீரென பிளேடால் தனது மர்ம உறுப்பை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்தோணி ராஜை பாத்திமா மீட்டு கே.கே. நகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அந்தோணி ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்