search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    விருகம்பாக்கத்தில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்

    சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற உள்ள அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.
    சென்னை:

    அண்ணாவின் 111-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் தென் சென்னை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் விருகை ரவி எம்.எல்.ஏ. தலைமையில் சாலிகிராமம் அருணாசலம் சாலையில் நாளை (15-ந்தேதி) ஞாயிற்றுகிழமை மாலை 6 மணிக்கு நடக்கிறது.

    இந்த கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார்.

    கூட்டத்தில் ராஜேந்திர பாபு, நுர்ஜஹான், காடுபாடி, தேவி, அபுபக்கர், செல்வம், செந்தில்பாண்டி, ஏ.எம்.காமராஜ், எஸ்.பி. குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    பகுதி செயலாளர்கள் மலைராஜன், மோகன், ஜெயச்சந்திரன், வேளச்சேரி எம்.ஏ. மூர்த்தி ஆகியோர் வரவேற்பு உரையாற்றுகின்றனர்.

    முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, கமலக்கண்ணன், ஜெயவர்த்தன், நட்ராஜ் எம்.எல்.ஏ., எம்.எம். பாபு, அசோக் உள்பட பலர் சிறப்பு உரையாற்றுகின்றனர்.

    கூட்டத்தில் ஏழைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

    கோ.சாமிநாதன், காசலி ஆகியோர் நன்றியுரை கூறுகின்றனர். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை தென் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் விருகை ரவி எம்.எல்.ஏ. தீவிரமாக செய்து வருகிறார்.

    கூட்டத்திற்கு கழக தொண்டர்களும் பொது மக்களும் திரளாக கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    Next Story
    ×