search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காதல் ஜோடி
    X
    காதல் ஜோடி

    நெல்லை கமி‌ஷனர் அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்

    நெல்லை கமி‌ஷனர் அலுவலகத்தில் பாதுகாப்பு கோரி காதல் ஜோடி தஞ்சமடைந்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நெல்லை:

    கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு தாமரைக்குளத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் ரம்யா (வயது 19). நாகர்கோவில் ஒழுகினச்சேரியைச் சேர்ந்தவர் முருகேஷ் (வயது 22). ரம்யாவும், முருகேசும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது திருமணத்திற்கு இருவீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து காதலர்கள் ஊரை விட்டு சென்று திருமணம் செய்வது என முடிவு செய்தனர். இதன்படி முருகேஷ், ரம்யா ஆகியோர் நெல்லை மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள வெங்கடேசபுரத்தில் நேற்று பதிவு திருமணம் செய்துகொண்டனர். இதைத்தொடர்ந்து பாளை வண்ணார்பேட்டையில் தனியாக வீடு எடுத்து வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் முருகேஷ் மற்றும் ரம்யா ஆகியோர் இன்று நெல்லை போலீஸ் கமி‌ஷனர் தீபக்தாமோர் அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில் நாங்கள் பெற்றோர் எதிர்ப்புகளை மீறி நேற்று திருமணம் செய்து கொண்டோம். எங்களது திருமணத்திற்கு வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

    எனவே எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறியிருந்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×