என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லை கமிஷனர் அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்
Byமாலை மலர்13 Sep 2019 8:49 AM GMT (Updated: 13 Sep 2019 8:49 AM GMT)
நெல்லை கமிஷனர் அலுவலகத்தில் பாதுகாப்பு கோரி காதல் ஜோடி தஞ்சமடைந்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:
கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு தாமரைக்குளத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் ரம்யா (வயது 19). நாகர்கோவில் ஒழுகினச்சேரியைச் சேர்ந்தவர் முருகேஷ் (வயது 22). ரம்யாவும், முருகேசும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது திருமணத்திற்கு இருவீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து காதலர்கள் ஊரை விட்டு சென்று திருமணம் செய்வது என முடிவு செய்தனர். இதன்படி முருகேஷ், ரம்யா ஆகியோர் நெல்லை மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள வெங்கடேசபுரத்தில் நேற்று பதிவு திருமணம் செய்துகொண்டனர். இதைத்தொடர்ந்து பாளை வண்ணார்பேட்டையில் தனியாக வீடு எடுத்து வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் முருகேஷ் மற்றும் ரம்யா ஆகியோர் இன்று நெல்லை போலீஸ் கமிஷனர் தீபக்தாமோர் அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில் நாங்கள் பெற்றோர் எதிர்ப்புகளை மீறி நேற்று திருமணம் செய்து கொண்டோம். எங்களது திருமணத்திற்கு வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
எனவே எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறியிருந்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு தாமரைக்குளத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் ரம்யா (வயது 19). நாகர்கோவில் ஒழுகினச்சேரியைச் சேர்ந்தவர் முருகேஷ் (வயது 22). ரம்யாவும், முருகேசும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது திருமணத்திற்கு இருவீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து காதலர்கள் ஊரை விட்டு சென்று திருமணம் செய்வது என முடிவு செய்தனர். இதன்படி முருகேஷ், ரம்யா ஆகியோர் நெல்லை மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள வெங்கடேசபுரத்தில் நேற்று பதிவு திருமணம் செய்துகொண்டனர். இதைத்தொடர்ந்து பாளை வண்ணார்பேட்டையில் தனியாக வீடு எடுத்து வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் முருகேஷ் மற்றும் ரம்யா ஆகியோர் இன்று நெல்லை போலீஸ் கமிஷனர் தீபக்தாமோர் அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில் நாங்கள் பெற்றோர் எதிர்ப்புகளை மீறி நேற்று திருமணம் செய்து கொண்டோம். எங்களது திருமணத்திற்கு வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
எனவே எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறியிருந்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X