search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணம் கொள்ளை
    X
    பணம் கொள்ளை

    பளுகல் அருகே மளிகை கடை பூட்டை உடைத்து பணம் கொள்ளை

    பளுகல் அருகே மளிகை கடை பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    பளுகலை அடுத்த நாகபுரம் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (வயது 57).

    இவர் இளஞ்சிறை சந்திப்பில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வியாபாரம் முடிந்தபின்னர் கடையை பூட்டிவிட்டு இவர் வீட்டிற்கு சென்றார். பின்னர் மறுநாள் காலையில் அவர் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கிறிஸ்டோபர் சம்பவம் குறித்து பளுகல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொள்ளையர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த மேஜையை திறந்து அதில் இருந்த ரொக்கப்பணம் ரூ.13 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

    சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கதவு, மேஜை ஆகிய இடங்களில் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×