என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Byமாலை மலர்3 Sep 2019 10:20 AM GMT (Updated: 3 Sep 2019 10:20 AM GMT)
நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்து வருவதால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கூடலூர்:
தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கினாலும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது. அதன் பிறகு மழை குறைந்ததால் நீர்வரத்து படிப்படியாக குறைந்தது.
இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையில்இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதேபோல் வைகை அணையில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டது. கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்ட போதும் நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்து வருவதால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பெரியாறு அணையின் நீர்மட்டம் 120 அடியில் உள்ளது. வினாடிக்கு 1472 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1480 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4266 மி.கன அடியாக உள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 54 அடியை எட்டியுள்ளது. அணைக்கு 1058 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 960 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 2560 மி.கன அடியாக உள்ளது. மஞ்சளாறு நீர்மட்டம் 35.40 அடி. சோத்துப்பறை நீர்மட்டம் 85.11 அடி. வரத்து 10 கன அடி. திறப்பு 3 கன அடி.
பெரியாறு 16.6, தேக்கடி 11.2, மஞ்சளாறு 2, சோத்துப்பாறை 2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கினாலும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது. அதன் பிறகு மழை குறைந்ததால் நீர்வரத்து படிப்படியாக குறைந்தது.
இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையில்இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதேபோல் வைகை அணையில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டது. கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்ட போதும் நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்து வருவதால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பெரியாறு அணையின் நீர்மட்டம் 120 அடியில் உள்ளது. வினாடிக்கு 1472 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1480 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4266 மி.கன அடியாக உள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 54 அடியை எட்டியுள்ளது. அணைக்கு 1058 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 960 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 2560 மி.கன அடியாக உள்ளது. மஞ்சளாறு நீர்மட்டம் 35.40 அடி. சோத்துப்பறை நீர்மட்டம் 85.11 அடி. வரத்து 10 கன அடி. திறப்பு 3 கன அடி.
பெரியாறு 16.6, தேக்கடி 11.2, மஞ்சளாறு 2, சோத்துப்பாறை 2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X