என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி இன்று தொடங்குகிறது
Byமாலை மலர்1 Sep 2019 3:33 AM GMT (Updated: 1 Sep 2019 3:33 AM GMT)
சென்னை கோட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் உள்ள தங்கள் விவரங்களில் திருத்தங்களை சிறப்பு செயலி (‘ஆப்’) மூலம் மேற்கொள்ளும் திட்டம் இன்று முதல் ஒரு மாதம் நடைபெற உள்ளது.
சென்னை:
இந்த திட்டம் மூலம் வாக்காளர்கள் தங்களது பெயர், பிறந்த தேதி, முகவரி, புகைப்படம் மற்றும் பாலினம் உள்ளிட்ட விவரங்களை இந்த செயலி மூலமும், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், 1950 என்ற தொலைபேசி மையம் மூலமும், வாக்காளர் உதவி மையத்தில் உள்ள வாக்காளர் பதிவு அலுவலகத்திலும், இ-சேவை மையம் மூலமும், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களில் ஒன்றை கொண்டு திருத்த விவரங்களை பதிவேற்றம் செய்யலாம்.
இந்த திட்டம் மூலம் வாக்காளர்களால் பதிவு செய்யப்பட்ட விவரங்கள் வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகள் மூலம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அக்டோபர் மாதம் 15-ந்தேதி விரைவு வாக்காளர் பட்டியலில் வெளியிடப்படும். மேலும் நவம்பர் மாதம் 2, 3, 10-ந்தேதிகளில் வாக்குச்சாவடியில் நடைபெற உள்ள சிறப்பு முகாம்கள் மூலமாகவும் வாக்காளர்கள் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
மேற்கண்ட தகவல் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சென்னை கோட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் உள்ள தங்கள் விவரங்களில் திருத்தங்களை சிறப்பு செயலி (‘ஆப்’) மூலம் மேற்கொள்ளும் திட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஒரு மாதம் நடைபெற உள்ளது.
இந்த திட்டம் மூலம் வாக்காளர்கள் தங்களது பெயர், பிறந்த தேதி, முகவரி, புகைப்படம் மற்றும் பாலினம் உள்ளிட்ட விவரங்களை இந்த செயலி மூலமும், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், 1950 என்ற தொலைபேசி மையம் மூலமும், வாக்காளர் உதவி மையத்தில் உள்ள வாக்காளர் பதிவு அலுவலகத்திலும், இ-சேவை மையம் மூலமும், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களில் ஒன்றை கொண்டு திருத்த விவரங்களை பதிவேற்றம் செய்யலாம்.
இந்த திட்டம் மூலம் வாக்காளர்களால் பதிவு செய்யப்பட்ட விவரங்கள் வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகள் மூலம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அக்டோபர் மாதம் 15-ந்தேதி விரைவு வாக்காளர் பட்டியலில் வெளியிடப்படும். மேலும் நவம்பர் மாதம் 2, 3, 10-ந்தேதிகளில் வாக்குச்சாவடியில் நடைபெற உள்ள சிறப்பு முகாம்கள் மூலமாகவும் வாக்காளர்கள் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
மேற்கண்ட தகவல் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X