என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வேலைக்கு சென்ற கும்பகோணம் நர்சு மாயம்- போலீசார் விசாரணை
பாபநாசம்:
தஞ்சை மாவட்டம் பாபநாசம் 108 சிவாலயம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ், (வயது 30). இவருக்கும் புவனேஸ்வரி (23) என்பவருக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
பின்னர் காளிதாஸ் வெளிநாடு சென்று வேலை பார்த்து வருகிறார்.
பாபநாசத்தில் வசித்து வந்த புவனேஸ்வரி கும்பகோணத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி வேலைக்கு புறப்பட்டு சென்ற புவனேஸ்வரி 28-ந் தேதி தான் வீட்டுக்கு வருவேன் என்று கூறி சென்றுள்ளார். அவர் சொன்னப்படி 28-ந் தேதி வீட்டுக்கு வராததால் அவரது உறவினர்கள் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரித்தனர்.
அப்போது அவர்கள், கடந்த 4 நாட்களாக புவனேஸ்வரி பணிக்கு வரவில்லை என்று தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் புவனேஸ்வரியை தேடினர். ஆனால் அவர் எங்கு சென்றார்? எங்கு உள்ளார்? என்பது தெரியவில்லை. அவரை யாரும் கடத்தி சென்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது பற்றிய புகாரின் பேரில் பாபநாசம் சப்- இன்ஸ்பெக்டர் வேதநாயகி வழக்குப்பதிவு செய்து மாயமான புவனேஸ்வரியை தேடி வருகின்றனர். வேலைக்கு சென்ற கும்பகோணம் நர்சு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்