என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நல்லம்பள்ளி அருகே கல்லூரி மாணவி மாயம்
Byமாலை மலர்27 Aug 2019 1:27 PM GMT (Updated: 27 Aug 2019 1:27 PM GMT)
நல்லம்பள்ளி அருகே கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள கழனிகாட்டூரைச் சேர்ந்தவர் முனுசாமி (வயது50). இவரது மனைவி பூவியம்மாள். இவர்களுக்கு 3 மகன்களும், கவிதா (17) என்ற மகளும் உள்ளனர். இதில் கவிதா தர்மபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி கல்லூரிக்கு செல்வதாக வீட்டைவிட்டு சென்றார். மாலை நீண்ட நேரமாகியும் கவிதா வீடு திரும்பி வரவில்லை. இதனால் பதறிப்போன கவிதாவின் தந்தை, தாய் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடிபார்த்தனர். எங்கும் தேடியும் அவர் கிடைக்கவில்லை. கவிதா மாயமாகி இருப்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து முனுசாமி அதியமான் கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான கவிதாவை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X